Friday 7 September 2012

சிப்பியையே உருவாக்கும் கடல் அவன்...

மூடிய சிப்பிக்குள் இருக்கும் 
முத்து இல்லை அவன்...
சிப்பியையே உருவாக்கும்
கடல் அவன்...
நெருக்கமானவன்
அடர்த்தியானவன்
ஆழமானவன்
அமைதியானவன்
அழுத்தமானவன்
கட்டுக்கடங்காதவன்
அவனுக்கு
பிறரின் கவிதைகளை 
அனுப்ப மனம் இல்லை....
நானே அவனை எண்ணி 
கவிதை எழுத முற்பட்டேன்....
முயற்சியும் செய்தேன்...
ஏன் அவனையே கவிதை ஆக்கினேன்...
கவி பாடவும் ஆரம்பித்துவிட்டேன்....
நெஞ்சில் நீங்கா
வாழும் நினைவுகளின் ஊடே
அவனின் சிறு புன்னகை 
என்னை பார்த்தது....
ஏக்கமாய் நானும் புன்னகை பூத்தேன்
அவனின் வருகை உறுதி என்று....

1 comment:

  1. பாத்தும்மா முத்திட போகுது

    ReplyDelete