Friday 21 September 2012

வாழ்ந்து முடித்துவிட்டாள்...





மனம் அறிந்த
மணாளன்...
அன்பின் உருவான
மாமியார்...
பாசம் கொட்டும்
மாமனார்...
விட்டுக் கொடுக்காத
கொழுந்தன்கள்....
உடன்பிறப்பாய் பழகும்
அக்காக்கள்...
உயிராய் பழகும்
நண்பர்கள்....
துள்ளிக் குதித்து
வரும் மழலைகள்...
சிறப்பான குடும்பம்...
அழகான வாழ்க்கை...
அடி எடுத்து வைக்கையில்
இடையூறாய்
ஜாதி...
மனம் பொருந்தி விட்டபின்
பொருந்தவில்லையாம் ஜாதகம்...

"முகம் தெரியாத ஜோசியக் காரனின்
பேச்சை நம்பும் பெற்றோர்கள்
ஏனோ தான் வளர்த்த பிள்ளைகளின்
மேல் நம்பிக்கை அற்றுத்தான் போய்விடுகிறார்கள்
சில முக்கியமான நேரங்களில்...."

நிம்மதியான வாழ்க்கையை விட
சாதியோடு அழிந்து போகும்
வாழ்கைக்கு வழி வகுக்கிறார்கள்
அவளின் குடும்பத்தார்கள்...
அவளோ மனதிற்குள்
வாழ்ந்து முடித்துவிட்டாள்
தன்வாழ்க்கையை
அந்த எளிமையான,
எதையும் எதிர்பாராத
இயற்கைகாதலனின்
குடும்பத்துடன்....

No comments:

Post a Comment