Thursday 13 September 2012

அவன் ஸ்பரிசம் தீண்ட...

கனவினில் மட்டுமே கண்டிருந்த
கவிதையின், இயற்கையின்
ஆசையின், காதலின் காதலன்
சப்தமே இல்லாமல்
தூரத்தில் நின்று
என் வருகையை கவனித்தான்
என எண்ணுகையில்
மரத்துப் போன செல்களுக்கும்
மறு உயிர் கிடைத்து
தேரில் ஏறிப் பறந்து
சென்று கொண்டிருந்தது
அவன் ஸ்பரிசம் தீண்ட...

No comments:

Post a Comment