Friday 23 August 2013

சந்தனத்தில் மலர்ந்தெழுந்த

அற்றை திங்களில் ஓர் நாள் 
அன்றில்மலர்ந்த முல்லைகளில்
வெளிபரவிய வாச மணம்
புரவி பூட்டிய பகலவானின்
பரந்து விரிந்த புஜங்களின்
மேல் திரவி வீச,
போர்த்திய மேகங்களில்
உதிர்ந்த தூறல்களுக்குள்
ஒளிவிடும் அம்புலியாய் 
எட்டி பார்த்து
அக மகிழ்ந்து ஆயாச காதலில்
திளைத்துக் கொண்டிருந்தாள்
சந்தனத்தில் மலர்ந்தெழுந்த
மங்கை அவள்...




Wednesday 21 August 2013

தேன் குடிக்க காத்திருந்த இதழ்களில்....

கம்மாலான மேகக் கூட்டங்களுக்கு மத்தியில்,
காதலனோடு கை கோர்த்தபடி ரயிலில், 
ஒரு நெடுந்தூர காதல் பயணம்....

ரம்மியமான பொழுதில் 
கரிச்சான் குருவிகளின் 
மகிழ்ச்சி சப்தத்தில் 
அவன் அழகின் கதகதப்பில் 
சாய்ந்ததவாறு தொலைதூரம்
பயணிக்க தயாரக்கிக் கொண்டேன் என்னை...

எனைக் காண வந்த வான வில்லும் 
பொறாமையில் பொசுக் என முகம் காட்டியது.

குளிர் அதிகமாய் என்னை தாக்க ஆரம்பிக்க
அவனின் அரவணைப்பிற்குள்
அதிகமாய் என்னை இறுக்கி கொள்ள 
வசதியாய் அமைந்து போனது....

இமையோரமாய் கண்டவன் 
எதையோ சொல்ல எத்தனித்து 
ஏதும் சொல்லாமல் 
ஒரு கல்ல சிரிப்பை மட்டும்
உதிர்த்துக் கொண்டான்

அதன் காரணம் அறிந்துகொள்ள
எனக்கு தோன்றவும் இல்லை 
முற்படாவும் இல்லை...

இருவர் மட்டுமிருந்த
அந்த பிரயாண வகுப்பில்
தனிமையை விரட்டி விட்டு
ஆனந்த தாண்டவம் 
ஆடிக்கொண்டிருந்தது
காதலோடு காதல்...

மெல்லிருட்டும் கவ்வ ஆரம்பிக்க
மிளிர்தான வெளிச்சத்தில் 
அவன் மார்பில் புதைந்திருந்த
என் முகம் நிமிர்த்தி,

நெற்றியில் படர்ந்திருந்த 
அலை கேசத்தை நீக்கிவிட்டு
காதல் ததும்பி துடித்த
கண்களின் மேல் மந்திர முத்தம் ஒன்றை
இட்டு வைத்தான்...

மெய் மறக்க ஆரம்பித்தத்தில்
உணர்வுகள் மொத்தமாய்
ஒன்று சேர்ந்திருந்தது 

பெற்றோரின் பாசம் மட்டும்
பெற்றிருந்தவளுக்கு
முதன் முதலாய்
ஓர் ஆண்மகனின் அருகாமை
தேகம் சார்த்த ஸ்பரிசம்...
அதன் மீதான நேசம்...

ஏதும் சொல்ல இயலாமல் 
இருத்துளி கண்ணீர் மட்டும் விரயம் ஆனது

பதறிய அவன்,
"ஏனடி அம்மு...
உயிரை கரைக்காதே
உன் கண்ணீரால்///

வாழும் ஒரு வாழ்க்கையும் 
உன்னோடு மட்டும்தான் 
உனக்காக மட்டும்தான் என்றான பிறகு 
எதற்கடி வீணடி த்தாய் 
என்னுயிரின் துளிகளை..."

என உரைத்த மறு நொடி
பொங்கி எழுந்த உணர்வுகளின் வேகத்தில்
அன்றில் மலர்ந்த அழகிய காதலனின் 
தேன் குடிக்க காத்திருந்த 
இதழ்களில் 
பதித்து வைத்தேன்
“நச்” என்ற  முத்தம் ஒன்றை...

சினப்படு... சினந்தெழு... சினத்து வீசு....

நாற்றிசைகளிலும் எறிகுண்டுகளால் 
நாளொரு தினமும்  உன் இனம் அழிய,
கால் உயிரும் கடை உயிருமாய்
அல்லோலப்பட்டு அடிமை படுத்தப்பட்ட 
ஈழ சகோதர சகோதரிகளின் வேதனையின் உச்சத்தில்
குதூகலித்து கும்மாளமிடும்
காமன் வெல்த் கேட்கிறதோ...?
எகத்தாளம் செய்து எடுக்கப் பட்ட
திரைப்படம் பார்த்து பூரிக்க வேண்டுமோ...?
அறுத்தெறிய வேண்டும்
இந்த அலங்கோலங்களை…

ரத்தம் கசிந்து கொண்டிருக்கும்
ஈழ பூமியில் 
ஈரமே இல்லாமல்
நம்மினத்தவர்களின் உயிர்களை தகர்த்தெறிந்தவர்களை 
வேரருக்க வீறு நிறைந்து
வேட்கை பருகி
வீர கர்ஜனையொடு யோ
சிலிர்த்தெழு தமிழா...!!

பீனிக்ஸ் பறவைக்கூட 
வெப்பத்தை வென்று 
சினம்கொண்டு மாற்று அவதாரம் புரிகிறது,

சுட்டு பொசுக்கும் தீப்பிழம்பின் உக்கிரத்தில் 
பால் கூட வெகுண்டு – வழிந்து ஓடி
தீ அணைத்து சினம் ஆற்றுகிறது,

கொங்கு தமிழின் சாராம்சம் 
ஓங்கி எழ,

தமிழ் இனம் போற்ற பட



சினப்படு...
சினந்தெழு...
சினத்து வீசு....

சினந்து எழும் காற்றும்
புயலாகும்போது 
பொங்கி எழுந்த நீ
பெரும் போராளியாய் 
கனல்வீசு
வீராவேசத்துடன்...

விடுபடட்டும் நம் இனம்
விடுதலையாகட்டும் நம் குலம்...
புறமுதுகு காட்டா நாம் வீரம்
செருக்கோடு வாங்கி தரட்டும் தமிழ் ஈழத்தை...
களம் கண்டு வெற்றி சூடடா…
கர்வத்தோடு சொல்கிறேன் அப்பொழுது 
“தமிழா நீ என் இனமடா”

                              - தீபா வெண்ணிலா