Saturday 22 December 2012

நம்மளோட நாடு....


நாடென்ன நாடு...?


வளர் சிறார் பருவம் 

வறுமையில் வாடையில் 
கவள சோறு கையில் தர 
யோசிக்கும் நாடு 
நாடென்ன நாடு....?



தன்வீட்டு பிள்ளைக்கு 

தைரியம் சொல்லும் மாந்தர்கள் 
எதிர் சட்டம் கண்டு 
பயந்து நடுங்கும் 
நாடென்ன நாடு...?

பள்ளிக் குழந்தைக்கு 
பாதுகாப்பில்லா 
உயிர் தொலைக்க 
துணை செல்லும்
நாடென்ன நாடு...?

வயது வந்த பிள்ளைகள் 
தன் இனம் என்றெண்ணா 
காமவெறிக்கு சோறுபோட்டு 
பசி தீர்த்து உடல்கொல்லும் 
நாடென்ன நாடு...?

தன் சுத்தம் பேண 
நேரம் ஒதுக்கும் மனித இனம் 
பொது இடம் தான்கண்டு 
தன் கழிவு வெளியேற்றி 
அசட்டை செய்யும் 
நாடென்ன நாடு...?

நியாய விலைக்கடையில் 
நேராய் நின்று நியாயமாய் 
வாங்க மறுத்து 
அவசரபிடியில் அல்லோலப்பட்டு 
அடித்து பிடித்து வாங்க முனையும் 
நாடென்ன நாடு...?

அழிந்தே விட்டது என்றெண்ணிய 
ஜப்பான் நாடு 
உலக பணக்கார வரிசையில் 
முன்னிற்க,
அதைக் கண்டும் திருந்தாத 
நாடென்ன நாடு...?

வீண்முயற்சி மட்டும்கொண்டு 
விதாண்டவாதம் புரிய 
முன்னிற்கும் மாந்தர்களைக் கொண்ட 
நாடென்ன நாடு...?


சிறு எறும்பின் சுறு சுறுப்பை 
தன்வாழ்வில் கடைபிடிக்கா
நாடென்ன நாடு...?

தேனியின் அயராத உழைப்பு கண்டு 
உயிர்த்தெழா சில மனிதர்களால் 
பின்னோக்கி செல்ல வழிவகுக்கும் 
நாடென்ன நாடு...?

நான் பாடுபடுவேன்...
நான் பாடு படுவேன்...
என் இந்தியா நிச்சயம் 
சுத்தமான, விவேகமான,
எழில்மிகு நாடாக மீண்டும் மாற 
நான் நிச்சயம் பாடு படுவேன்... 
என உறுதி மொழி மேற்கொண்டு

ஒவ்வொருவரும் 
சுயமரியாதையையும் 
பகுத்தறிவையும் 
பொதுநலமும் 
தன்னலமும் 
தன்னகத்தில் கைக்கொண்டு 
தலைநிமிர்ந்தால்


நம் நாடு போல்
திறமையான
வேறொரு நாடு எங்கே..!!

No comments:

Post a Comment