Saturday 29 December 2012

செவத்த மச்சான் வரும் திசையெல்லாம்...


செவ்வண்ண சேலையுடுத்தி 

சரம் மல்லி தொடுத்து வச்சு 
செவத்தொரம் சாஞ்சேனே...
செதுக்கி வச்சேன் எவ்விழிய
செவத்த மச்சான் 
வரும் திசையெல்லாம்...
சிமிட்டமால் இருக்க
காவல் வச்சேன் 
என் உயிரை....



வானமிருட்டிருச்சு...

வருத்தமுந்தான் தாக்கிடுச்சு....
வர்ற வழியில வஞ்சரையும் 
கொஞ்சி என அணைக்க மல்லிகையும் 
கொத்தாக வாங்கி வரும் மச்சானே... 
நெல்லு குத்தி 

பொங்கி வைப்பேன் உமக்கு 

நிறைமாசம் எந்தாய் வீடு 

நான் போறமட்டும் ...

No comments:

Post a Comment