Tuesday 11 December 2012

நிலாக்காதலானே....



சலனமற்ற ஏரிக்கரையில் அமர்ந்துகொண்டு 
நிலாக் காதலனை ரசித்துக் கொண்டிருந்தேன்...
ஏனோ அவன் பிரகாசம் வீச மறுத்தான்....
ஏனென்று வினவ...
"தூளியில் தூரிகை படரும் முன்பே 
அன்பே உன் வாடிய முகம்தன்னை
நான் நோக்கிய பொழுதில்
எழாத சோகம் ஒன்று எந்தன் நெஞ்சம் அப்பியது....
செவ்வானம் செவிமடுக்க
எந்தன் ஓவியத்தின் முகம்காணவே
முன்பொழுதிலே வந்து சேர்ந்தேன்...
விரைவில் உன் முகம் காணாததால்
என் முகப் பிரகாசம் மங்கியதடி
என் மஞ்சள் மங்கையே...
இனி மறு சூரியன் நாந்தானடி
குளுமை மட்டுமே என்
சொந்தமடி என் கண்ணின் காரிகையே... "
என்றெந்தன் புலம்பல்தனை
போக்கிட்டாய் பொல்லாக் காதலனே...

No comments:

Post a Comment