Monday 31 December 2012

மறக்காதே மாமனே....



வெளக்கு வச்ச நேரம் 
மருதாணி கன்னமிட 
அரைச்சு வச்சென் 
நெத்திலி குழம்பு...
வீட்டரிசி சோறும் 
வெந்த கருவாடும் 
துடிச்சுகிடக்கு பானையிலே...


வெல்லனமே நீ வந்தா 
வெளாசிட்டு போய்டலாம்...
நேரம் முடிஞ்சுபோனா 
மடிஞ்சு போகும் என்னுசுரு....
மறக்காதே மாமனே....
உம்மாமன் மக நான்தானே

No comments:

Post a Comment