Thursday 19 September 2013

முத்த சிற்பங்களை....

முழு பெளர்ணாமியின்
வெளிச்சபொலிவை
முழுவதுமாய்
தேசிங்கு ராசனின்
காந்தக் கண்கள்
உள் வாங்கிய வண்ணமிருக்க,
அவன் கரங்களோ
எதிரில் நாணிவந்த
பாவையவளின்
கொடிஇடை பிடித்து இழுக்க, 
அன்றில் மலர்ந்த
விழி பூவில்
இதழ் இலைகள் கொண்டு
இதமாய் பதித்து வைக்கிறான்
காதலில் சொக்கிப் போன
முத்த சிற்பங்களை....
 

Wednesday 18 September 2013

உன் நினைவுகளோடு பசுமையோடு நான்...

நகரத்தின் பின்னலில்
தவித்துக் கொண்டு
கிராமத்துக் காதலியின்
நினைவுகளை காதலித்து
சுகம் காணும் 
மாமன் மகனே ...
ஓடும் நீரிலும்
உன் பெயரை
எழுதி ரசித்து
சூரிய கதிர்ககளில்
சுகம் கொள்ள
கனா காணும்
எனைக் காண
கண்ணிமை
சிமிட்டலுக்குள்
வந்து சேருவீராக...
பசுமை மாறா
உன் நினைவுகளோடு
பசுமையோடு நான்...

Tuesday 17 September 2013

உதிர்ந்து போன நான்....

தனிமையின் சிறகுகள்
இறுக்கி கொண்டிருக்கிறான
காலக் கொடூரன்
நகர்வத்தில் சூனியம் 
வைத்துக் கொண்டான் போலும்...
இருட்டின் தூறலில்
முழுவதுமாய் நனைந்து
விரக்தியின் தாககத்தில்
மெளனமாய் நான்...
இறை உண்ண வந்தவைகளாய்
என்னை தின்று தீர்க் கின்றன
வறுமை எறும்புகள்
பாறையில் முளைவிட்ட
நஞ்சு கொடியாய்
சுற்றி வளைத்து விட்டன
குடும்ப பொறுப்புகள்...
திணறி, பிதற்றி
துவண்டு வெம்பி
காற்று நீங்கிய
லோகமாய் வறண்டு போய்
உதிர்ந்து போன நான்....