Wednesday 18 September 2013

உன் நினைவுகளோடு பசுமையோடு நான்...

நகரத்தின் பின்னலில்
தவித்துக் கொண்டு
கிராமத்துக் காதலியின்
நினைவுகளை காதலித்து
சுகம் காணும் 
மாமன் மகனே ...
ஓடும் நீரிலும்
உன் பெயரை
எழுதி ரசித்து
சூரிய கதிர்ககளில்
சுகம் கொள்ள
கனா காணும்
எனைக் காண
கண்ணிமை
சிமிட்டலுக்குள்
வந்து சேருவீராக...
பசுமை மாறா
உன் நினைவுகளோடு
பசுமையோடு நான்...

1 comment: