Tuesday 17 September 2013

உதிர்ந்து போன நான்....

தனிமையின் சிறகுகள்
இறுக்கி கொண்டிருக்கிறான
காலக் கொடூரன்
நகர்வத்தில் சூனியம் 
வைத்துக் கொண்டான் போலும்...
இருட்டின் தூறலில்
முழுவதுமாய் நனைந்து
விரக்தியின் தாககத்தில்
மெளனமாய் நான்...
இறை உண்ண வந்தவைகளாய்
என்னை தின்று தீர்க் கின்றன
வறுமை எறும்புகள்
பாறையில் முளைவிட்ட
நஞ்சு கொடியாய்
சுற்றி வளைத்து விட்டன
குடும்ப பொறுப்புகள்...
திணறி, பிதற்றி
துவண்டு வெம்பி
காற்று நீங்கிய
லோகமாய் வறண்டு போய்
உதிர்ந்து போன நான்....

No comments:

Post a Comment