Friday 21 December 2012

பொங்கல் திருநாள் நம்ம ஊரில்....


சூரியன் வரும்முன் 

குளித்தெழுந்து 

வாசல் முழுதும் கோலமிட்டு 

வண்ணங்கள் பல தீட்டி 




மண்பானைகள் 
இரு விறகடுப்பில் வைத்து 
மஞ்சள் சுத்தி 
பிள்ளையார் பிடித்து 
அடுமனை வரைந்து 
மாக்கோலம் வரைந்து 


பக்கவாட்டில் கரும்பு கட்டி 
பச்சரிசி பானையில் இட்டு 
சூரியன் துயில் விழிக்கையில் 
குதூகலத்தோடு பொங்கலோ பொங்கல் 
என மகிழ்ச்சி புரியும் தருணம் 
முதல்நாள் சூரிய பொங்கல்....

இரண்டாம்நாள்


பொங்கல் வைத்து 
அதேபாணியில் ஊர் முழுதும் ஓன்று சேர்ந்து 
ஒருபானையில் பொங்கல் செய்து 
உழவன் வீட்டு உதவாளிக்கு 
உணவை படைத்து இன்பமாய் போகும்
அந்நாள்....

மூன்றாம் நாள் 




புதிதாய் குளித்து மலர்ந்து 

பாவாடை தாவணி அணிந்து
அதற்கேற்றாப்போல் தோடு மாட்டி 
மல்லிப்பூ தலையில் சூட்டி 
வீட்டுக்கு வரும் வெள்ளை வேட்டி அணிந்த 
முறைமாமன்கள் மீது 
மஞ்சள்நீரை கரைத்து எடுத்து 


துரத்தி ஊற்றி ஓடி மறைந்து,
குறும்போடு சேர்ந்து துள்ளிவரும் காதலோடு 
மாலையில் கோவிலில் 
வளையல், பாசி வாங்கித்தர சொல்லி 
வாட்டி எடுத்து வாங்கி போட்டுப்பார்க்கும் 
நேரம் சுகம்...

இவ்வளவு அற்புத தருணங்களை 
அள்ளித்தரும் பொங்கல் விழாவை 
சீரும் சிறப்புமாய் 
உற்றார் உறவினர்கள், 
உயிர் தோழமைகளுடன் கொண்டாடி மகிழ்வோம்....


பொங்கல் வாழ்த்துக்கள்....

No comments:

Post a Comment