Thursday 27 December 2012

கனவு காதல்...


நீல வண்ண நீர்பரப்புக்கிடையில் 
அமைதியான நிலப்பரப்பு...
சில்லென்ற தென்றல் 
கரைபரப்பில் இருந்து 
தென்னைகளின் ஊடேவந்து 
தழுவிக் கொண்டதில் 
இமைகள் இரண்டும் காந்தமாய்...


உன் உரசலான மூச்சுக் காற்றில் 
ஸ்பரிஷம் மெல்லியதாய் சிலிர்க்க
உழைத்த களைப்பில் உறங்கச்
செல்லும் சூரியனைக் காண 
ஆவலாய் வந்த நிலா 
நம் காதல் கண்டு 
நட்சத்திரங்களோடு சேர்ந்து 
கண்சிமிட்ட, நேரப்போழுதில் 
இரவு உணவும் சுவைக்கப்பட்டது....


வெளிச்சமாய் நிலவின் ஒளிவீச 
பூமியின் இயற்க்கை சாரம்சத்தை 
வியந்து அளவளாவினோம்...
கீத ஓசை செவி நுழைய 
இரவின் அணைப்பில் 
துயில் தழுவ, 
விடித்து எழுவதற்குள் 
காதைப் பிளக்கும் வெடிகுண்டு சத்தம்...




அந்நொடி உணர்ந்தேன் 
வெடி தயாரிக்கும் 
தொழிற்சாலையில் 
காதலனை தொலைத்து 
கொத்தடிமையாய் சிக்கி 
ஆலையிலே உறங்கியதை...

No comments:

Post a Comment