Tuesday 27 November 2012

சாதீ....அணைக்கப்படவேண்டிய ஒரு தீ....

                                   
                    தர்மபுரி அருகே காதல் திருமண பிரச்சினையால் கடந்த 7–ந்தேதி 3 கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்ட செய்தி அனைவருக்கும் தெரிந்ததே...


காதல் திருமணத்தால் ஏற்பட்ட இந்த கலவரத்திற்கு பிறகுதான் பல மீடியாக்களும், சமூக சீர்திருத்தவாதிகளும் மற்றும் சாதி எதிர்ப்பு, மறுப்பு தெரிவிக்கும் இயக்கங்களும் தர்மபுரிக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த முற்பட்டார்கள்... இது நல்ல விஷயம்தான்.


ஆனால் இந்த தருமபுரி போன்று பல தருமபுரிகள் இன்னும் இருக்கிறது எனது கிராமம்போல்... தந்தை பெரியாரின் கருத்துகளும், ஜாதி ஒழிப்பிற்காக அவரது உழைப்பின் வழியும் விழிப்புணர்வே பெறாத தென் தமிழகத்தில் இருக்கும் பல கிராமங்களுக்கு முழுவதும் சென்று சேர ஜாதி மத ஒழிப்பு, மூட நம்பிக்கை அழிப்பு பற்றி பிரச்சாரக் கூட்டங்களும், நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இதுவரை யாருமே கண்ணில் பார்த்திராத "ஜாதி" என்னும் தீயை அணைக்க முடியும். இப்பொழுது இருக்கும் இளைய சமுதாயம் முற்றிலும் ஜாதி ஒழிப்பதில் முக்கியத்துவம் கொண்டுள்ளனர்.


இருந்த போதிலும் என்னை போல் கிராமப்புறங்களில் இருந்து கொண்டு காதல் செய்துவரும் இளம் சமூகம் தன்  பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்று வருகின்றனர். ஆதலால், எங்களுக்கு உதவியாக, ஜாதியை ஒழிக்க, எண்களின் குக்கிராம மக்களுக்கு ஜாதி பற்றிய தெளிவினை ஏற்படுத்த மீடியாக்களும், திராவிட இயக்கமும் உதவிட வேண்டுகிறோம். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியால் தான் மீண்டும் ஒரு தருமபுரி கிராம நிலைமை ஏற்படாமல் தடுக்க முடியும்.


பொது இடத்தில் வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு சமூக புரட்சியாளர்களால் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்பதால் உங்கள் முன் இக்கருத்தை முன்வைக்கிறேன்...

No comments:

Post a Comment