Friday 9 November 2012

தீபாவளி தரப்போகிறது எனக்கு தீராவலி....


தீபாவளி கொண்டாடுவதில் விருப்பம் இல்லை...
உறவுகள் மொத்தமும் கூடி இருப்பதால்
திடீரென்று தீபாவளிக்கு
சொந்த ஊருக்கு செல்லவேண்டிய நிர்பந்தம்...
மனம் முழுக்க பயத்துடன்
பயணிக்க காத்திருக்கிறேன்....


எப்பொழுதும் பறந்து திரியும்
அந்த சிட்டு தனம் என்னிடம் இல்லை...
எப்பொழுதும் ஆராவரத்துடன் செல்லும் என் பயணம்
உயிரான காதலனும்
உளமார அன்புகாட்டிய
அவன்தான் குடும்பமும் நீங்கி
அமைதியான முறையில்பயணிக்கிறது...
காதலை வீட்டில் சொல்ல பயம் ஏதும் இல்லை...
துணிச்சல் பல இருந்தும்
துவளுகிறேன்...
என் காதல் எங்கே என் குடும்பத்தின்
உயிரைக் காவு வாங்கி விடுமோ என்று...


 

பெற்றோரின் ஆசை
என் திருமணம் வெகு விமரிசையாகவும்
என் கணவன் துணிச்சல் மிக்கவனாகவும்
என் எதிர்கால குடும்பம் வசதியாகவும் பாசமாகவும்
இருக்கவேண்டும் என்பதே...
இப்படிப்பட்ட அனைத்தும் ஒரு சேர கிடைத்தும்
தூக்கி எறிவதிலேயே
ஆக்கம் கொடுக்கின்றனர்....


தனித்து விடப்பட்ட
சிறகொடிந்த பறவையாய் நான்..

  இதயத்தின் இரண்டு ஓசையாய் இருகுடும்பமும்...
எதைவிடுத்து எதை நீக்க....
முயன்றும் தோல்விதான் என தெரிந்தும்
புரிந்து கொள்ள என் பெற்றோர்களை
திசை திருப்ப பார்க்கிறேன்...





இதயம் வெளிப்படையாய் இருந்தால்
நான் படும் பாடு கண்டு சுருங்கியே
இறந்திருக்கும்...
என்ன செய்ய...
எனக்குள் இருக்கும் இந்த
மன போராட்டத்திற்குத் தீர்வு 

என் பெற்றோரின் சம்மதம் மட்டுமே......



சோகத்தை சுமந்த படியே
உயிரினை அடமானம் வைத்துவிட்டாற்போல்
உலர்ந்து உலர்ந்து
சுருங்கி போனவளாய்
தென்றல் புகா மனம்கொண்டு
இல்லாத இதயத்தோடு
நொறுங்கிப் போய்
பயணிக்கிறேன் என் இல்லத்திற்கு
நிம்மதி இல்லாத மனதோடு....
எனினும் இந்த தீபாவளி தரப்போகிறது
தீராவலி....

No comments:

Post a Comment