Monday 10 September 2012

"ஏய்... கருவாச்சி...."

செத்து விட்டேன்
அந்த நிமிடத்தில்....
காது முடி நீக்கி
மீசை முடி உரச
முத்த இதழ்கள் தீண்ட
ஸ்பரிச வெப்பம் கொண்டு

செவியோரம் செல்லமாய்
சொல்லிய அவனின்
ஒற்றை கொஞ்சல் வார்த்தையில்
"ஏய்... கருவாச்சி...."

இப்பொழுது மீண்டும்
சாகப் போகும்
நிமிடத்திற்காக
காத்திருக்கிறேன்...

- கிராமத்துக் காதலி....

No comments:

Post a Comment