Wednesday 12 September 2012

தனிமையில்...


பரபரப்பான இந்த
சென்னை வாழ்கையில்...
கடலோரக் கரையில்
அலைகளின் ஆர்ப்பரிப்பில்...
வண்ண விளக்குகளின்
அலங்கரிப்பில்...
மின்னிக் கொண்டிருந்த
கட்டிடங்களைப்
பார்த்தவண்ணம்
இதமாய் வீசிய
கடற்காற்றை
ரசித்தபடியே அமர்ந்திருந்தேன்
என் இயற்கைக் காதலனின்
நினைவலைகளை நெஞ்சில்
அணைத்தவாறே
தனிமையில்...

1 comment:

  1. அருமை...தனிமையின் நினைவுகள்

    ReplyDelete