Wednesday 12 September 2012

"நன்றி இயற்கையின் சொந்தங்களே...."

நான் வடித்த கவிதைகளின்
உணர்வு வெளிப்பாட்டில்
மயங்கி தன் நிலை மறந்த
நகரத் தொடங்கிய மரம்,
தரைமேல் எழுந்த மண்,
மண்ணுலகம் பயணிக்கும் வானம்,
உவர்ப்பை நீக்கிய கடல்,
குளிர்ச்சியாய் ஆன சூரியன்,
குவிந்து அடங்கிய காற்று,
எழுந்து நின்ற நீர்,
நேர்வழியில் உருண்டு வந்த கோள்,
தன் குரல் மறந்த குயில்,
ஆட மறந்த ஆண் மயில்,
வேட்டை மறந்த சிங்கம்,
துள்ள மறந்த மான்,
வேகம் மறந்த குதிரை,
திசை தொலைத்த திசைக்காட்டி,
வண்ணம் தொலைத்த வண்ணத்துப் பூச்சி,
மகரந்த சேர்க்கை செந்தூரப்பூ,
ஒட்டு மொத்த இயற்கை குடும்பத்தினரும்
"எங்களை விட தனித்திறமை வாய்ந்தவனா
உன் இயற்கைக் காதலன்..?"
என்று என்னிடம் வந்து முறையிட்டன...
அவனின் முகம் பார்த்ததும்
அந்த வசீகர ஒளியில்
அவனையே தங்களின் தலைவனாக ஏற்று
என்னை பெருமை படுத்தி
"நீ கொடுத்து வைத்தவள்...
அடி கிராமத்துக் காதலி...
அடுத்த வாழ்க்கையில்
நாங்கள் உன்னுடைய
இயற்கைக் காதலனாகவே
பிறக்க காத்திருக்கிறோம்"
என்று என்னை வாழ்த்திச் சென்றன...
மனதில் சொன்னேன்...
"நன்றி இயற்கையின் சொந்தங்களே...."

2 comments: