Tuesday 30 April 2013

ஏக்கத்தோடு விழி வீசி....


காற்றின் அசைவையும் 
கட்டி இழுத்து '
காதல் கணை தொடுக்கும் 
காதலர்களுக்கு 
மத்தியில்

முகம் அறியா 
குணம் தெரியா 
மனம் பொருந்திய 
அந்த திருட்டு கள்வனை 
எதிர்நோக்கி 
தன் 
நினைவலைகளை நீராட்டுகிறாள்

அக அழகு 
கலந்துவிட்டிருந்த 
பருவ செழிப்பில்,

குணம் கொண்டிருந்தவனை 
மணம் முடிக்க மா ஆசை கொண்டாள்

வளர்ச்சி, வளைவு 
அழகு, ஆளுமை 
பரிவு, பாசம் 
காதல், காமம் 
எண்ணம், எழுத்து 
இவைகளின் 
அரசனாக

முடிசூட்டவிருக்கின்ற 
தன்னுள் பாதியை 
செதுக்கிக்கொண்டிருக்கின்ற 
செறிவு நிறைந்த 
சங்கக்காரன் அவனுக்காக

தன் பிழை திருத்தி 
புத்துணர்ச்சி பூட்டி 
கறை மறைத்த 
முழுநிலவாய்

முக மலர்வோடும் 
அக தெளிவோடும் 
அமைதியாய் 
காத்துக்கொண்டிருகிறாள் அவள்

அவனைப் போலும் 
தேடிக் கிடைக்காத 
தென்றலை முழுதாய் 
தன்னுள் 
ஸ்பரிசிக்கச் செய்து

எதிர் பாரா முத்தம் ஒன்றை பெற 
ஏக்கத்தோடு விழி வீசி....

1 comment:

  1. ரசனையாக முடித்துள்ளீர்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete