Monday 22 April 2013

வீணாய் உருவானது

அடர்ந்த காட்டுக்குள்
அமைதியாய் இருந்த
அந்த கோவிலின்
கட்டிட கலை
பார்க்க சென்றவனிடம்,

எல்லையோர கருப்ப சாமீ
எதுவும் செய்ய இயலா
தன் கையாலாக
நிலையில் வருந்தி
... கவலையாய் சொன்னது

"மனிதனுடைய
அறிவு வளர்ச்சியில்
வீணாய் உருவானது
மண்ணாலான நாங்கள் தான்" என்று...

(தீபா வெண்ணிலா)

No comments:

Post a Comment