Friday 19 April 2013

கோவிக்காமல் வந்துவிடு என் காதல் மழையே..

மங்கிய ஒளியில்
மாய்ந்து போய்
வறண்டு கிடந்த
என் மேனி,

... அந்தி வண்ண
வானவில்லின் சாரலாய்
உன் வருகையில்
உருப்பெற்று
கொழுத்த கன்னக் கதுப்புகளில்
உன் ஒரு துளி முத்தம்
உருண்டோடியது...

அலையடித்து ஓய்ந்த
மனதாய்
இறக்கி வைத்த
பாரமும்
கரைந்து ஓடியது...

நீருஞ்சிய
நன்னிலம்
காயமேற்பட்டார்ப்போல்
காய்ந்து கிடக்க
தீராத் தாகமும்
தீர்ந்து போனது
விடாத உன்
முத்த மழையால்...

செல்லமாய்
செந்தேனாய்
அமுதாய்
ஏகலைவனாய்
ஆரமுதனாய்
நினை நான் கொஞ்ச
நில்லாது பெய்து
நிரப்புவாய்
என் நேசத்தோடு சேர்ந்து
நல் நிலத்தையும்..

கோவிக்காமல் வந்துவிடு
என் காதல் மழையே..

(தீபா வெண்ணிலா)

1 comment:

  1. காதல் மழையை ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete