Tuesday 23 April 2013

பிடித்தவைகள்.... 1

உருப்பெற்ற
ஊரில்
எனக்கே எனக்காய்
பிடித்தவைகளுள்
சில...

சொட்டு சொட்டாய்
விழும் நீரின்
சப்தம் கேட்க பிடிக்கும்....

கொக்கரிக்கும் சேவலின்
கொண்டை நிறம் பிடிக்கும்...

மழலையின்
உதட்டு சிரிப்பில்
வழியும் எச்சில்
பிடிக்கும்...

அம்மாவின்
தலையில்
வைத்திருக்கும்
பூ வாசம் பிடிக்கும்...

மேயும் ஆட்டுக்குட்டியிடம்
வம்பு பண்ண பிடிக்கும்...

பால் சுரக்கும்
மாட்டிடம்
பால் குடிக்க பிடிக்கும்....

ஆடும் மயிலின்
கழுத்தை கட்டி
அணைத்து கொள்ள பிடிக்கும்...

வேப்பம் பழத்தில்
இருக்கும் இனிப்புச்சாறை
ருசிக்க பிடிக்கும்...

பொன்வண்டு பிடித்து
இலை ஊட்ட பிடிக்கும்...

வயல் மோட்டாரில்
குதூகலமாய்
குளிக்க பிடிக்கும்...

கூட்டாஞ்சோறு ஆக்கி
கூட்டமாய் தின்ன
பிடிக்கும்...

கொட்டும் மழைக்கு
மேனி முழுதும்
தானம் செய்ய பிடிக்கும்...

( பிடித்தவைகள்.... 1
தொடரும்...)

1 comment:

  1. /// தானம் செய்ய பிடிக்கும்... ///

    உங்களின் வரிகளும்
    மிகவும் பிடிக்கும்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete