Monday 22 April 2013

வர்ணனை - 3

சோளக்காட்டுக்குல
என்னை
சொக்க வைச்சவனே...

நீ பார்த்ததுல
சோழிபோல
சொலளுதே
எம்ம மனம்....

கட்டுக்கடங்கா காளயும்
... உனக்கு அடங்க
வீராப்பு வாச்சனே...

உன் கெண்டகாலு
பட்டா
கெக்கலிக்கும்
கெண்ட மீனா இவ ...

சொணங்காம
நீ உழைக்கையில
சொகமேரும்
இவ மனசு...

ஏறு பூட்டி
எறங்கயில
இசை பாடும்
இவ நெஞ்சு..

திமிறி துடிக்கும்
நெஞ்சுக் கூடும்
செவத்த விழி
கண்ணுகளும்
கருமேனி
கட்டுடம்பும்

வெசன படாத
வெள்ள மனசும்
நிறைஞ்சு இருக்கு
உம்ம மேல...

பொருமுதே
இவ கூட்டம்
பொய்க்காம
நீ இவளுக்குன்னு ஆனதுக்கு

(கிராமத்து நாகரிகம்
வர்ணனை - 3
தீபா வெண்ணிலா)

No comments:

Post a Comment