Thursday 25 April 2013

சூறையாடிய புலி ஓன்று சுணங்கினால் தகுமா?


வேதனையின் 
உச்சகட்டத்தில் 
விம்மலுடன் வெடித்தது 
அழுகை

நெஞ்சுக் கூடு 
சக்கையாய் பிழியப்
பட்டார்ப் போன்ற 
வேதனை 

ரத்தநாளங்கள் 
உறைந்து சிதைந்தார்ப்போன்ற 
உள்ளுணர்வு 

தனிக்காட்டு ராணியாய் 
சுதந்திரம் அனுபவித்தவள் 
சுக்குநூறாக்கப்படுகிறாள் 
குடும்ப அரசியலின் கோரப்பிடியில் 

தனக்கு விருப்பமில்லாதவையை 
துரிதப்படுத்தி 
செய்ய முனைபவர்களால் 
 தன் வாழ்க்கை பாதிக்கப்படுமே 
என  தளராத 
மனதோடு போராடுபவளுக்கு 
கிடைத்த பெயர் 
அடங்காதாவள் 
திமிர் பிடித்தவள்
  
விட்டுக் கொடுக்காத 
உறவுகளின் மதிப்பை 
துச்சமாய் தூக்கி 
எறிய மனம் துடிக்கிறது 

உணர்வுகளை 
கொச்சைபடுத்துபவர்கள் 
முகம் முழுதும் 
தீப் பிழம்பை 
அள்ளி பூச 
நினைக்கிற வேகம் 

மற்றவர்களுக்காக 
வாழ, 
மரித்துப் போகக்கூட 
அனுமதி தரும் 
பெற்றவர்களை 
பிணந்தின்னியிடம் 
தள்ளி விடலாமா 
என வெடிக்கும் எரிச்சல் 

விளையாட்டாய் 
ஏற்பட்ட 
கோபத்தில் 
வினையோடு 
பழி வாங்க 
முடிச்சு போடும் 
உடன்பிறப்புகளை 
எட்டி உதைத்துவிடலாம்
என்கின்ற அளவிற்கு 
வெறுப்பு 

உயிரை விட 
தன் குடும்ப உறவுகள் தான்
பெரிது என 
இத்தனை நாள் எண்ணியவளுக்கு 
கிடைத்த பரிசு 
இவர்களின் மேல் 
எதுக்களிக்கிறது 
இந்த வன்மம்...

ஆனால் 
ஏதும் செய்ய இயலாதவளாய் 
தனக்குத் தானே 
தண்டனை கொடுத்துக் 
தன் இயலாமையை 
வெளிக்கொணர்கிறாள் 
உண்ணாவிரதம் இருந்து 
சோர்ந்து தினமும் 
ஒருக்கட்டத்தில் 
பேசகூட
திராணியற்று போய்விடுகிறாள் 

சூறையாடிய 
புலி ஓன்று 
சுணங்கினால் தகுமா?

இந்த கயவர்களின் 
கட்டுக்குள் இருந்து 
பொருமவதைக் காட்டிலும் 
கொதித்து 
எழுந்த மனதோடு போராடுவதே 
பலம் பொருந்திய பயன் 
என சீறும் வேங்கையென 
சிலிர்த்து
எழுந்துவிட்டாள் 

சமுதாயத்திற்கு 
கற்றுக்கொடுக்க வேண்டியதை விட 
தன் குடும்பத்திற்கு 
கற்றுத்தர
வேண்டியதுதான் 
அதிகம் என...


1 comment:

  1. அப்படித்தான் எழ வேண்டும்... தாமதம் கூடாது... செயலாக்கவும் வேண்டும்...

    ReplyDelete