Monday 22 April 2013

வர்ணனை... 1

ஒற்றளபெடையில்
ஒற்றி எடுத்த வரியில்
கால வேகத்தில்
கடைந்து எடுத்த
திடகாத்திர மேனியும்
பரந்து விரிந்த
விசால பார்வையோடு
கலந்துள்ள வலிமையும்
ஒன்றாய் கொண்டெடுத்த
கரிகாலனின்
பேரனவன்
சொலித்தான்
வைரம் தோற்ற வெண்மையில்...
மாடத்து நிலாவும்
பொறாமை கொண்டது
அவனழகு கண்டு

(அரசர்காலம் பற்றிய ஆய்விற்கான ஆண்கள் குறித்து எழுதிய வர்ணனை... 
தீபா வெண்ணிலா)

No comments:

Post a Comment