Thursday 18 April 2013

மன்னிக்க முடியாது உன்னை....

மன்னிக்க முடியாது உன்னை....
மரத்து போன என் இமைகளுக்கு
சிமிட்ட முடியவில்லை...
உலர்ந்து போன என் நாவிற்கு
சுவைக்க அறிய முடியவில்லை...
குழைந்து போன என் மேனிக்கு
தெளிவு பிறக்கவில்லை...
அடங்கிப் போன என் மனதிற்கு
ஆளுமை வரவில்லை....
இறந்திருந்த என் நினைவுகளுக்கு
உணர்ச்சி கிடைக்கவில்லை...
சகல நிறுத்தத்திற்கும்
சாமானியமாய் அமைந்த காரணம்
பெண் தானே என்று
என்னை இளக்காரம் செய்த நீ...
என்னுள் பாதியை அமைந்த நீ
என் சோகம் பங்கிட்ட நீ
என் உரிமையோடு போட்டியிட்ட நீ
என்னல்மே நானான நீ
இன்று உதாசீனப்படுத்தினாய்
"பொம்பளைமாதிரி நட" என்று...
உனக்காய் உருக்குலைந்த நான்
இன்று உருவாரம் எடுக்கிறேன்
பெண்ணென என்னை இகழ்ந்த 
உன் வீரபொய்மை
விரைவில் பொய்த்துவிட...

1 comment:

  1. அருமையான வரிகள்! சிறப்பான கவிதை!

    ReplyDelete