Thursday 18 April 2013

"மறை பொருள்"

 
 
சந்தனத்தில் நீராடி,
அலைகற்றை கூந்தலை
உலர்த்தி அடக்கி,
வாசமல்லி மணம்கமழ
நேர்த்தியான பின்னலில்
சரத்தோடு சொருகி,
முகப்பூச்சு அளவாயிட்டு,
முழுமதி கண்களில்
மை தனை தீட்டி,
உதட்டுச்சாயம் ஒளிர,
பளிச்சென்றிருந்த
நீலவண்ண பட்டுத்தாவணியை
பார்த்து உடுத்தி,
 

இணையான கலரில்
தோடோடு, வளையலும்
கழுத்தில் கல்மணியுமிட்டு,
கண்ணாடிபார்த்து
களிப்புற்றாள் தன்னழகில். . .
மிச்ச ஒரு வேலையாய்
கண்கள் மட்டும்
தெரியவிட்டு
உடுத்திக்கொண்டாள்
கருப்புவண்ண பர்தாவை 
அந்தப் பளிங்கு பெண். .

("மறை பொருள்" என்ற மௌன குறும்படம் சொல்லிய கவிதை)

2 comments: