Tuesday 18 June 2013

புலம்புகிறது ஒரு சதைப்பிண்டம்....



                                                                                              அவர்கள் பார்வையில் 
நீ உயிரல்ல...
நீண்ட கூந்தலும்
கனத்த மார்புகளும்
பருத்த தொடையுமான
ஒரு சதைபிண்டம்தான்....

அவர்கள் சுவாசிக்க 
காற்றடைத்த குழாயாய் 

அவர்கள் ருசிக்க 
அறுசுவை கலந்த பண்டமாய் 

அவர்கள் குடிக்க 
சாறு நிறைந்த பலமாய் 

வேதனை தீர்த்துக்கொள்ள 
சேலை கட்டிய இச்சையரசியாய் 

வசியம் ஏற்றுக்கொள்ளும் 
வயாகரா மருந்தாய் 

வெளியேற்றும் விந்துக்களை 
பத்திரப்படுத்தும் பெட்டியாய் நீ...

இப்படி அவர்களுக்கு 
எல்லாமுமாய் இருந்த 
உன்னை எவர் மதித்தார்?

உன் உணர்ச்சிகளுக்கு 
இங்கே 
உயிர் உண்டா என்ன?

நகைப்புதான் மிஞ்சுகிறது ;

உன்னை உயிரிணையாய் 
பார்க்க மறந்தவர்கள் 
எப்படி உன் உணர்வுகளுக்கு 
உயிரூட்டம் கொள்வார்கள்....?

தினசரி பஞ்சணையில் 
கட்டி உருள வந்தவர்கள் 
ஊதி விளையாடியது 
பஞ்சாய் உன்னை

கட்டிய மனைவியினை 
எட்டி உதைத்தவர்கள் 
கிட்ட அணைக்க 
ஒட்டிவருவது 
உன் மாராப்பு
அழுக்காக்க…

தினசரி இரவுகளில் 
காமக் கொடூரர்களின் 
வெறியாட்டத்தோடு 
போட்டி போட்டு 

கடைசி நேர 
கலவி முடிந்ததும் 
தூரம் போய் 
தொலைந்து போகிறது 
மானத்தோடு 
கற்பும்...

பசியின் பிணி 
தீர்க்க 
பல கழுகுகளின்
இச்சை தீர்க்க வேண்டிய 
கட்டாயம்

அழிய வேண்டிய 
சமுதாயத்தில் 
ஓர் அங்கமாய் 
அலைகிறேன் 
நானும் ...


காரி உமிழும் 
சமூகத்திற்கு 
அது தரப்பு நியாயம்தான் பெரிது 

இருந்துவிட்டு போகிறது 
சமூகம் தரவில்லை 
உருப்படியாய் 
ஒரு வேலை சோறு...

பின், புகழ்ந்தால் என்ன
காரி உமிழ்ந்தால் என்ன...?
எதை எதையோ 
துடிக்கும் என் முந்தானை 
இதையும் சேர்த்து 
துடைக்காதா என்ன?

2 comments:

  1. சீரழியும் சமூகத்தின் கோபம் வரிகளில் புரிகிறது...

    ReplyDelete
  2. சமூக அவலங்களை சாடும் சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete