Thursday 25 April 2013

நட்சத்திரங்களுக்கு மத்தியில்....


பளீரென்று 
ஒளி கொட்டி 
மறைந்து விட்ட 
மின்னல் கீற்றுபோல்,

எவருமறியா 
தீட்டி வைத்த 
புகழ் கொட்டும் 
புனையா சித்திரம் போல்

மேகங்களின் 
நடுவில் 
மெதுநடை பயின்று 
மிளிர்கின்ற 
கவிதையாய் 

நெருப்புக் 
கிடங்குக்குள் 
கொதித்துக் கொண்டிருக்கும் 
மனதாய்,

மழை துளிகளுக்குள் 
செதுக்கி வைத்த 
உயிராய்

காற்றுக்கு 
வலி இல்லாமல் 
தூது தொடுக்கிறேன் 

நினைவுகளுக்கு 
நெளிவு வராமல் 
நினை நினைக்கிறேன் 

எங்கு நீ 
மறைந்து எனை 
அணைத்தாலும் 
 

முகம் அறியா 
உனக்காக 
முகத்தாமரையாய் 
மலர்ந்து 
தினமும் தேடுகிறேன்

விரைந்து எனிடம் 
வந்திடு 
விதியை அழித்து
எனை சேர்ந்திடு

காதலில் காமமும் 
காமம் மறந்த காதலும் 
இவ்வையம் அறியா 
இன்பமும் 
எனக்கு மட்டும் 
கொடுத்திட 
எல்லைகள் கடந்து 
ஓடி வா...

தூக்கம் தொலைத்து 
பகலும் மறந்து 
எனை அறியாது தேடுகிறேன் 
உன்னை 

நள்ளிரவு வானில் 
பரவிக்கிடந்த 
நட்ச்சத்திரங்களுக்கு 
மத்தியில்....

2 comments: