Monday 31 December 2012

புதுவருச பொறப்பாம்...



இன்னைக்கில்ல நேத்தில்ல 

நாள் முழுக்க உழைச்சும் 
என்ன சுகம் நாங்கண்டேன்?
தெனமுந்தான் பொங்குறேன் 
நெல்லரிசிக்கு பதிலாக
என்னுடைய ஏக்கத்தை... 

நாலெழுத்து படிச்சுருந்தா 
உசந்துதான் இருந்திருப்பேன்,
ஒன்னும் படிக்காம 
ஓடாத்தான் தேஞ்சுட்டேன்,
விடிஞ்சு எழுந்தும் 
வெளக்கு வச்சும் 
தீராத என் வருமை 
வருசம் ஒன்னு பொறக்கையில
வழி ஒன்னு வருமான்னு 
ஏக்கமா காத்தேனே...
எள்ளளவு நம்பிக்கையும் 
தீஞ்சுதான் போயிருச்சு..
ஏமாத்தம் தான்மிச்சம் ...
வருசம் பல ஓடிருச்சு 
வயசும் ஆயிருச்சு 
இப்பவும் எப்பவும் 
கூலிக்கே நான் மாரடிக்கிறேனே....
இதுல வேற புதுவருச பொறப்பாம்...?

எங்குட்டு போயி இந்த கதைய சொல்ல...?
 

1 comment: