Wednesday 15 August 2012

வாழிய வாழியவே...


வாழிய வாழியவே...
நாடொன்று வளர ஏடொன்று அவசியம் என்பது போல் எம் கழகம் தழைத்தோங்க இன்றியமையாதவர் நீரே...... பாட்டுக்களிலே பல பாக்களைப் படைத்திட்ட பாட்டுடைத் தலைவரே..... எம் வெண்தாடி வேந்தரின் அன்பிற்க்கு அடி பணிந்தவரே.... பார்ப்பன புரட்டுக்கு பதிலடி பலமாய் கொடுத்திட்டவரே... அகம்பாவம் கொண்டெழுந்த பார்ப்பன கூலிகளின் மூக்கை உம் பேனா மையின் துணைகொண்டே பதிலடியாய் அறுத்திட்டவரே... அறியாமை இருட்டில் அகப்பட்டவர்களுக்கு வார்த்தைகோவைகளிலே வெளிச்சம் தந்திட்ட மின்சாரமே... கழகத் தோழர்களுக்கு காவலனாய் இருக்கும் கருஞ்சட்டையே... கழகக் குடும்பத்தின் அரணாய் விளங்கும் மயிலாடனே... தலையங்கம் பல எழுதி நம்மை தலைநிமிர்வடைய செய்திட்டவரே...... எவ்வளவு பெரிய கேள்வி கணைக்கும் விரல்நுனியில் பதிலளிக்கும் கவி புலமையே.... உமக்கு நிகர் நீர் மட்டுமே... பவள ஆண்டில் அடி எடுத்து வைக்கும் பகுத்தறிவு வேங்கையே... பல்லாண்டு வாழ்க என உம்மை வாழ்த்தும் அளவிற்க்கு வயது வராவிட்டாலும் வழி தெரியாவிட்டாலும் வணங்கி மகிழ்கிறோம்.......! மகிழ்ச்சியுடன் வெண்ணிலா....

4 comments:

  1. யாரப்பா இவரு ?

    ReplyDelete
  2. திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்....

    ReplyDelete