Wednesday 21 August 2013

சினப்படு... சினந்தெழு... சினத்து வீசு....

நாற்றிசைகளிலும் எறிகுண்டுகளால் 
நாளொரு தினமும்  உன் இனம் அழிய,
கால் உயிரும் கடை உயிருமாய்
அல்லோலப்பட்டு அடிமை படுத்தப்பட்ட 
ஈழ சகோதர சகோதரிகளின் வேதனையின் உச்சத்தில்
குதூகலித்து கும்மாளமிடும்
காமன் வெல்த் கேட்கிறதோ...?
எகத்தாளம் செய்து எடுக்கப் பட்ட
திரைப்படம் பார்த்து பூரிக்க வேண்டுமோ...?
அறுத்தெறிய வேண்டும்
இந்த அலங்கோலங்களை…

ரத்தம் கசிந்து கொண்டிருக்கும்
ஈழ பூமியில் 
ஈரமே இல்லாமல்
நம்மினத்தவர்களின் உயிர்களை தகர்த்தெறிந்தவர்களை 
வேரருக்க வீறு நிறைந்து
வேட்கை பருகி
வீர கர்ஜனையொடு யோ
சிலிர்த்தெழு தமிழா...!!

பீனிக்ஸ் பறவைக்கூட 
வெப்பத்தை வென்று 
சினம்கொண்டு மாற்று அவதாரம் புரிகிறது,

சுட்டு பொசுக்கும் தீப்பிழம்பின் உக்கிரத்தில் 
பால் கூட வெகுண்டு – வழிந்து ஓடி
தீ அணைத்து சினம் ஆற்றுகிறது,

கொங்கு தமிழின் சாராம்சம் 
ஓங்கி எழ,

தமிழ் இனம் போற்ற பட



சினப்படு...
சினந்தெழு...
சினத்து வீசு....

சினந்து எழும் காற்றும்
புயலாகும்போது 
பொங்கி எழுந்த நீ
பெரும் போராளியாய் 
கனல்வீசு
வீராவேசத்துடன்...

விடுபடட்டும் நம் இனம்
விடுதலையாகட்டும் நம் குலம்...
புறமுதுகு காட்டா நாம் வீரம்
செருக்கோடு வாங்கி தரட்டும் தமிழ் ஈழத்தை...
களம் கண்டு வெற்றி சூடடா…
கர்வத்தோடு சொல்கிறேன் அப்பொழுது 
“தமிழா நீ என் இனமடா”

                              - தீபா வெண்ணிலா

3 comments: