Tuesday 4 March 2014

கனவுக் குழியில் நான்..


தாழாட்டும் நிஜத்தில்
தவழ்ந்து வரும்
மாய நிகழ்வுகளாய்
கனவுகள்…

என்னுள்ளும் விருட்ச்சிக்கிறது
நிலமில்லா இடத்தில்
தரை தேடும் தட்டான்கள்,
திசை அறியாது வீழ்ந்து
தரை தேடி வரும்
பனியின் மணித்துளி..

என்ன இது குழப்பமாய்..

அய்யத்துடன் அடுத்த வழி நோக்கி..

சட்டென்ற மாறலில்,
சிவப்பு ரத்தத்தை
போர்த்திக் கொண்ட வானத்தில்
திட்டு திட்டாய்
கருப்பு ஆயுதங்கள்
ஆவேச நடை போடும்
சிரமில்லா மனித முண்டங்கள்
கனவிலுங்கூட ஓர் ஜாதிக் கலவரம்..

அந்த குறுகலான பாதைக்குள்
மாற்றிக் கொள்கிறேன்
என் வழியை

சில்லரைத் தட்டுக்களாய்
சிதறி ஓடும் சிறுமிகள்
ஆடையற்ற உடலுடன்..
கேட்டால் அங்கு 
புணர்ச்சி என்பது
பாவச் செயலாம்..

என்ன கனவோ…
வழி திரும்பலாம்
என அடுத்த அடி வைக்கையில்
இலகுவான மண் பிசைவுக்குள்
மெல்ல மெல்ல சிக்கியது..

என் கால்கள்
அமிழ்கிறேன் அமிழ்கிறேன்
கை எட்டும் திசையில்
ஆலமர வேர் இருந்தும்
சிக்கி சிக்கி புதைய போகிறேன்..

என் அத்தியாயத்தின்
முடிவுரை இப்படித்தான் போல
என கண்ணீர் வடிக்கையில்,


பட்டான ஓர் பெண் கரம்
மெல்ல என்னை இழுக்கிறது
முகம் பார்க்க எண்ணுகையில்
என்னை வெளியில் தள்ளி விட்டு
ஓட எத்தனிக்கிறது

கொட்டிய இருட்டில்
பதித்து வைத்த 
நிலவாய் அவள் முகம்
கண்டுகொண்டேன்..

அன்று
சம்பிரதாயம் பார்க்கையில் 
சபித்து திட்டிய அந்த
வெள்ளை உடை கொண்ட
விதவைதான் என…

ச்சே.. மனித வாழ்வு எவ்வளவு 
புனிதமானது…
உணர்ந்து கொண்டேன்… 

நிஜம் திருத்தாத என்னை
நியாயமாய் திருத்தியது
அந்த கனவு
இன்றும் என் நினைவில்..

2 comments:

  1. மனித வாழ்வு தான் எவ்வளவு புனிதமானது…!

    ReplyDelete
  2. மாலை வணக்கம் நட்பு

    ReplyDelete