Monday 23 April 2012

பாவையின் புலம்பல்...


முதல் முதலில் அனுபவித்த
ஆடவனின் ஸ்பரிசத்தால்
பித்தம் தெளியாமலே இருக்கிறேன் இக்கனம்வரை....
நடந்தது நினைவாகவே இருந்துவிட்டும்...

அன்பின் உச்சக்கட்ட பரிசாய்
உனக்கே உனக்காய் தர
நான் சேமித்து வைத்திருந்த பொக்கிஷத்தினை
வாரி இரைத்து விட்டேன் உன்னிடத்தில்....
கொடைவள்ளலைபோல கொடுத்தருளினாய் நீயும் எனக்கு...
மிச்சம் வைக்காமல் பருகினோம் முத்தத் தேனை....
இப்பொழுதும் உன் இதழ் ஸ்பரிஷம்
என்னுள் செய்கிறது ஏகப்பட்ட சில்மிஷம்....
 
புஜ பலாக்கிரமசாலி உன்னுள்,
சிறைபட்ட கிளியாய் நான்...
மது செய்த மயக்கமோ... இல்லை
நீ செய்த மாயமோ..
வாள் போரினை விட
வலிமையனாதாய் ஏற்றேன்...
உன்னோடு புரிந்த இதழ் போரை....
 
இதழ்களை மட்டும் இணைத்து
இசை மீட்டும்
வித்தையை எங்கிருந்து கற்றாய்..?
வெளிப்பட்ட வியர்வையும்
உன் அரவணைப்பால்
வெட்கித்தான் போயிற்று...
பெண்மையின் சக்தியும்
உன் முன்னாள்
தோற்றுத்தான் போயிற்று...
கட்டிக்காத்த என் தன்மையினை
சற்று தளரத்தான் விட்டு விட்டேன் உன்னிடத்தில்...
 
நம் நிலை கண்டு
காற்றும் வெளிச்சமும்
வெட்கத்தால் ஓடி ஒளிந்து விட்டது போலும்...
நீ மட்டும் குளித்த குளியலைவிட
உன்னோடு சேர்ந்து
நானும் குளித்து விட்டேன்
வியர்வையில்....
உன் விரலில் மீட்டும் சக்தி அதிகம் போலும்...
இடை வீணையில் என்ன அருமையாய் வசித்து விட்டாய்....
 
களவும் கற்று மறக்கத்தான்
உன்னை நாடினேன்..
மறந்தும் மறந்து விடாதே இந்த நிலாப் பெண்ணை...
உன் தீண்டலில் முக்கிய பங்கு வகித்தவள் இவள்தான் என்பதை...
உன் கண்ணீர் துளிக்குதான் என்ன சக்தி.....!
யாரையும் அனுமதிக்காத நானா
உன்னை என்னுள் படர விட்டேன்..?
ஆச்சரியம்தான்..
 
விரலிடையில் பதித்த முத்தம்தான்
சலிப்படையாமல் இருந்தது என்னிடம்...
ஒரு நொடிபொழுதில்
அமுதம் ஊட்டி அன்னையாய் மாறிய நான்
இன்னும் எத்தனை காலம் இருப்பேன் உன்னிடம்...
பிரிவை துரத்தி விடுவோம்...
வேண்டாம் அது நமக்கு...
 
இதழ் பதித்து
இடை தொட்ட
இமைப் பொழுதிலே
இறந்திருக்கலாம் நான் ..
இடைவிடாது வாட்டுகிறது அந்த

இன்பம் என்னை
என்பதை எப்படி புரிய வைப்பேன் உன்னிடம்...
 
உன்னிலை மறந்து நீ இருந்திருந்தாலும்
நான் நானாகத்தான் இருந்தேன்...
அதனால்தான் இந்த புலம்பல்...

உன் மார்பில் விழி வைத்து
இதழ் பதித்து இமைமூடிய அக்கணம் 
நெகிழ்ச்சியடைந்துதான் போனேன்..
எத்தனை பெண்களின் நினைவு உனக்கு இருந்திருந்தாலும்
என் நினைவு நீ மட்டும்தான் என்பதை நினைவில் வை..
அறியா பாவை நான்...
உன் நினைவால்
அழித்து விடாதே என்னை...

                                    By –
                                    Sentimental Idiot…..





1 comment:

  1. அப்பப்பா காதலும் காமமும் சொட்டும் கவிதை .உண்மைய சொல்லுங்க இதை எழுதியது யார் என்னக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி

    ReplyDelete