Tuesday, 18 June 2013

புலம்புகிறது ஒரு சதைப்பிண்டம்....



                                                                                              அவர்கள் பார்வையில் 
நீ உயிரல்ல...
நீண்ட கூந்தலும்
கனத்த மார்புகளும்
பருத்த தொடையுமான
ஒரு சதைபிண்டம்தான்....

அவர்கள் சுவாசிக்க 
காற்றடைத்த குழாயாய் 

அவர்கள் ருசிக்க 
அறுசுவை கலந்த பண்டமாய் 

அவர்கள் குடிக்க 
சாறு நிறைந்த பலமாய் 

வேதனை தீர்த்துக்கொள்ள 
சேலை கட்டிய இச்சையரசியாய் 

வசியம் ஏற்றுக்கொள்ளும் 
வயாகரா மருந்தாய் 

வெளியேற்றும் விந்துக்களை 
பத்திரப்படுத்தும் பெட்டியாய் நீ...

இப்படி அவர்களுக்கு 
எல்லாமுமாய் இருந்த 
உன்னை எவர் மதித்தார்?

உன் உணர்ச்சிகளுக்கு 
இங்கே 
உயிர் உண்டா என்ன?

நகைப்புதான் மிஞ்சுகிறது ;

உன்னை உயிரிணையாய் 
பார்க்க மறந்தவர்கள் 
எப்படி உன் உணர்வுகளுக்கு 
உயிரூட்டம் கொள்வார்கள்....?

தினசரி பஞ்சணையில் 
கட்டி உருள வந்தவர்கள் 
ஊதி விளையாடியது 
பஞ்சாய் உன்னை

கட்டிய மனைவியினை 
எட்டி உதைத்தவர்கள் 
கிட்ட அணைக்க 
ஒட்டிவருவது 
உன் மாராப்பு
அழுக்காக்க…

தினசரி இரவுகளில் 
காமக் கொடூரர்களின் 
வெறியாட்டத்தோடு 
போட்டி போட்டு 

கடைசி நேர 
கலவி முடிந்ததும் 
தூரம் போய் 
தொலைந்து போகிறது 
மானத்தோடு 
கற்பும்...

பசியின் பிணி 
தீர்க்க 
பல கழுகுகளின்
இச்சை தீர்க்க வேண்டிய 
கட்டாயம்

அழிய வேண்டிய 
சமுதாயத்தில் 
ஓர் அங்கமாய் 
அலைகிறேன் 
நானும் ...


காரி உமிழும் 
சமூகத்திற்கு 
அது தரப்பு நியாயம்தான் பெரிது 

இருந்துவிட்டு போகிறது 
சமூகம் தரவில்லை 
உருப்படியாய் 
ஒரு வேலை சோறு...

பின், புகழ்ந்தால் என்ன
காரி உமிழ்ந்தால் என்ன...?
எதை எதையோ 
துடிக்கும் என் முந்தானை 
இதையும் சேர்த்து 
துடைக்காதா என்ன?

Tuesday, 30 April 2013

ஏக்கத்தோடு விழி வீசி....


காற்றின் அசைவையும் 
கட்டி இழுத்து '
காதல் கணை தொடுக்கும் 
காதலர்களுக்கு 
மத்தியில்

முகம் அறியா 
குணம் தெரியா 
மனம் பொருந்திய 
அந்த திருட்டு கள்வனை 
எதிர்நோக்கி 
தன் 
நினைவலைகளை நீராட்டுகிறாள்

அக அழகு 
கலந்துவிட்டிருந்த 
பருவ செழிப்பில்,

குணம் கொண்டிருந்தவனை 
மணம் முடிக்க மா ஆசை கொண்டாள்

வளர்ச்சி, வளைவு 
அழகு, ஆளுமை 
பரிவு, பாசம் 
காதல், காமம் 
எண்ணம், எழுத்து 
இவைகளின் 
அரசனாக

முடிசூட்டவிருக்கின்ற 
தன்னுள் பாதியை 
செதுக்கிக்கொண்டிருக்கின்ற 
செறிவு நிறைந்த 
சங்கக்காரன் அவனுக்காக

தன் பிழை திருத்தி 
புத்துணர்ச்சி பூட்டி 
கறை மறைத்த 
முழுநிலவாய்

முக மலர்வோடும் 
அக தெளிவோடும் 
அமைதியாய் 
காத்துக்கொண்டிருகிறாள் அவள்

அவனைப் போலும் 
தேடிக் கிடைக்காத 
தென்றலை முழுதாய் 
தன்னுள் 
ஸ்பரிசிக்கச் செய்து

எதிர் பாரா முத்தம் ஒன்றை பெற 
ஏக்கத்தோடு விழி வீசி....

Thursday, 25 April 2013

சிதைக்காமல் உன்னுள் சிறைபட...

மழை கோர்த்த
மேகம் ஓன்று
மௌன நடை
பயின்ற மாலையில்,

காதலிலே
சுளுக்கு எடுக்கும்
கள்ளன் அவன்
கடற்கரையோரம் 
காத்திருக்க,

காலத்தின்
பொறுமைக்கு
கட்டுபட்டவளாய்

மனதுக்குள்
மகிழ்ச்சி
ஊஞ்சலாட
கருநீல சேலையை
ஒழுங்கு செய்தவண்ணம்
முன்னோக்கி
நடந்து வந்தவளை

இமைக்க மறந்த
கண்ணோடு
விழுங்க ஆரம்பித்தான்
காத்திருந்தவன்

அருகில் அவள்
வந்தமர்ந்ததும்

பருவத்தில்
செய்த சண்டித்தனத்தில்
கொட்டிய
பருக்கள் அடங்கிய
முகத்தில்
பொசு பொசுவென்றிருந்த
குறும்பு மறைத்த
மீசையை
முறுக்கி விட்டு

சிகரெட் மறைத்த
உதடுகளில்
பூசிய மென்மையோடும்

குறும்புக் கண்களில்
தவள விட்ட
காதலோடும்

குழந்தைத்தனம்
நிறைந்தவளின்
கொஞ்சும் முகம்
பார்த்து
ரசிக்க தொடங்கினான்...

அவனது விரல்கள்
ஆயாசம் தொடர
அவளின்
கன்னக் கத்துப்புகளை
தொட எத்தனித்தவன்

ஏதும் செய்ய இயலாதவனாய்
அவளின் தோள் பட்டை
தொட்டு

காதுக்கு அருகில்
வசப்பட்டிருந்த
காற்றை
துரத்தி விட்டு

பூசலோடு
ஏங்கிய மனமுமாய்
புன்னகை ஒன்றை
முன் வைத்து

மெலிதான
சப்த்தத்தில்
சொன்னான்

"ஏய்... பாப்பு...
அசையாதே...

என்னுள்
உன்னை
உள்வாங்கி கொண்டிருக்கிறேன்

சிதைக்காமல்
உன்னுள்
சிறைபட

இவ்வுலகத்தோடு
நாமிருவரும்
வசப்பட

என்னை
புதைத்துக்
கொண்டிருக்கும்
இந்த தருணம்
மீண்டும் கிடைக்கும் வரை" என்று 

(Deepa Vennila)

சூறையாடிய புலி ஓன்று சுணங்கினால் தகுமா?


வேதனையின் 
உச்சகட்டத்தில் 
விம்மலுடன் வெடித்தது 
அழுகை

நெஞ்சுக் கூடு 
சக்கையாய் பிழியப்
பட்டார்ப் போன்ற 
வேதனை 

ரத்தநாளங்கள் 
உறைந்து சிதைந்தார்ப்போன்ற 
உள்ளுணர்வு 

தனிக்காட்டு ராணியாய் 
சுதந்திரம் அனுபவித்தவள் 
சுக்குநூறாக்கப்படுகிறாள் 
குடும்ப அரசியலின் கோரப்பிடியில் 

தனக்கு விருப்பமில்லாதவையை 
துரிதப்படுத்தி 
செய்ய முனைபவர்களால் 
 தன் வாழ்க்கை பாதிக்கப்படுமே 
என  தளராத 
மனதோடு போராடுபவளுக்கு 
கிடைத்த பெயர் 
அடங்காதாவள் 
திமிர் பிடித்தவள்
  
விட்டுக் கொடுக்காத 
உறவுகளின் மதிப்பை 
துச்சமாய் தூக்கி 
எறிய மனம் துடிக்கிறது 

உணர்வுகளை 
கொச்சைபடுத்துபவர்கள் 
முகம் முழுதும் 
தீப் பிழம்பை 
அள்ளி பூச 
நினைக்கிற வேகம் 

மற்றவர்களுக்காக 
வாழ, 
மரித்துப் போகக்கூட 
அனுமதி தரும் 
பெற்றவர்களை 
பிணந்தின்னியிடம் 
தள்ளி விடலாமா 
என வெடிக்கும் எரிச்சல் 

விளையாட்டாய் 
ஏற்பட்ட 
கோபத்தில் 
வினையோடு 
பழி வாங்க 
முடிச்சு போடும் 
உடன்பிறப்புகளை 
எட்டி உதைத்துவிடலாம்
என்கின்ற அளவிற்கு 
வெறுப்பு 

உயிரை விட 
தன் குடும்ப உறவுகள் தான்
பெரிது என 
இத்தனை நாள் எண்ணியவளுக்கு 
கிடைத்த பரிசு 
இவர்களின் மேல் 
எதுக்களிக்கிறது 
இந்த வன்மம்...

ஆனால் 
ஏதும் செய்ய இயலாதவளாய் 
தனக்குத் தானே 
தண்டனை கொடுத்துக் 
தன் இயலாமையை 
வெளிக்கொணர்கிறாள் 
உண்ணாவிரதம் இருந்து 
சோர்ந்து தினமும் 
ஒருக்கட்டத்தில் 
பேசகூட
திராணியற்று போய்விடுகிறாள் 

சூறையாடிய 
புலி ஓன்று 
சுணங்கினால் தகுமா?

இந்த கயவர்களின் 
கட்டுக்குள் இருந்து 
பொருமவதைக் காட்டிலும் 
கொதித்து 
எழுந்த மனதோடு போராடுவதே 
பலம் பொருந்திய பயன் 
என சீறும் வேங்கையென 
சிலிர்த்து
எழுந்துவிட்டாள் 

சமுதாயத்திற்கு 
கற்றுக்கொடுக்க வேண்டியதை விட 
தன் குடும்பத்திற்கு 
கற்றுத்தர
வேண்டியதுதான் 
அதிகம் என...


தீண்டளுக்குரியவன் ...








நிலவின் பிரகாசத்தின் 
கூட்டுக்குள் 

அடங்கிய நான் 

சிந்தும் வியர்வை 

துளிகளுள்
புதைந்த நான் 

செதுக்கிய சிலையின் 
வடிவத்திற்குள் 
ஒளிந்த நான் 

ஓய்ந்த அலைகளின் 
குளிரில் 
கரைந்த நான் 



மேகங்களின் 
சங்கமிப்பில் 
மூழ்கிய நான் 

நாதங்களின் 
இசையில் 
மயங்கிய நான் 

முத்தங்களுக்குள் 
மூச்சு முட்ட 
ஏக்கமான நான் 

பித்தங்களின் பிடியின் 
பிணற்றுகிறேன்

யாருமில்லா  
ஓரறையில் 
இருளின் 
துணையோடு 
ஏக்கம் தீர்க்க 
முற்படுகிறேன் 

எனக்கான 
என்னுடைய 
உயிர் 
எங்கே 
தத்தளிக்கிறதோ...?

அது மீண்டு வந்து 
என்னை 
மாண்டு போக வைக்குமோ 
அதன் உயிருக்குள்...

சொல்லா வேதனையாய் 
சுழன்று வீசும் 
என் மனமே...

பொறுமை கொள்வாயாக
நிதர்சன வாழ்க்கையில் 
நீடூழி வாழ 
தென்றலின் மீதமர்ந்து 
தீண்டவருவான் 
உன் தீண்டளுக்குரியவன் ...
( Deepa Vennila)

நட்சத்திரங்களுக்கு மத்தியில்....


பளீரென்று 
ஒளி கொட்டி 
மறைந்து விட்ட 
மின்னல் கீற்றுபோல்,

எவருமறியா 
தீட்டி வைத்த 
புகழ் கொட்டும் 
புனையா சித்திரம் போல்

மேகங்களின் 
நடுவில் 
மெதுநடை பயின்று 
மிளிர்கின்ற 
கவிதையாய் 

நெருப்புக் 
கிடங்குக்குள் 
கொதித்துக் கொண்டிருக்கும் 
மனதாய்,

மழை துளிகளுக்குள் 
செதுக்கி வைத்த 
உயிராய்

காற்றுக்கு 
வலி இல்லாமல் 
தூது தொடுக்கிறேன் 

நினைவுகளுக்கு 
நெளிவு வராமல் 
நினை நினைக்கிறேன் 

எங்கு நீ 
மறைந்து எனை 
அணைத்தாலும் 
 

முகம் அறியா 
உனக்காக 
முகத்தாமரையாய் 
மலர்ந்து 
தினமும் தேடுகிறேன்

விரைந்து எனிடம் 
வந்திடு 
விதியை அழித்து
எனை சேர்ந்திடு

காதலில் காமமும் 
காமம் மறந்த காதலும் 
இவ்வையம் அறியா 
இன்பமும் 
எனக்கு மட்டும் 
கொடுத்திட 
எல்லைகள் கடந்து 
ஓடி வா...

தூக்கம் தொலைத்து 
பகலும் மறந்து 
எனை அறியாது தேடுகிறேன் 
உன்னை 

நள்ளிரவு வானில் 
பரவிக்கிடந்த 
நட்ச்சத்திரங்களுக்கு 
மத்தியில்....

Wednesday, 24 April 2013

கோடி இன்பம்


                "இந்த மாப்பிள்ளையை வேணாம் சொல்ற நீ, இனிமேல் இந்த வீட்ல இருக்க கூடாது..." கசையடியாய் பேசும் அப்பா,  "நீ எவனையாவது கூட்டிடுதான் ஓட போற "கடுகடுக்கும் அம்மா, "நீ என்ன ஐஸ்வர்யா ராயோ..." எரிந்து விழும் தம்பி, "உன் மூஞ்சிக்கு இந்த மாப்பிள்ளை கிடைச்சதே பெரிசு..." ஏசிர்பத்து போடும் தங்கை. விரக்தியின் உச்சக்கட்டத்திற்கு அனுப்ப வழி வைத்து கொடுத்தனர் அவளை.  மொத்தத்தில் வெறுப்பின் மறு உருவமாக மாறி இருந்தது அந்த குடும்பம். என்னவொரு திருத்தம் என்றால் ஒரு நேரத்தில் பாசத்தின் மாற்றுவாய் இருந்த குடும்பம். இப்படி ஆனதற்கு காரணம் மூத்தவளுக்கு முதலில் திருமணம் முடித்து வீடு கடத்த வேண்டும் என்பதே... 
                                ஆனால் அவளுக்கு அந்த மாப்பிள்ளையை கட்டிக்கொள்வதில் துளியும் விருப்பம் இல்லை. தான் எதிர்பார்த்ததில் ஒரு சிறு அளவுகூட அவன் இல்லாததில் பொய்த்துப் போய்விட்டாள். மனம் நிறைவு பெறா நிலையில் மணமுடிக்க மறுக்கையில் கூட பிறந்தவர்களும் கோப பிழம்பை உமிழவே கொதித்துத்தான் போயிருந்தாள். இவர்களுக்கு இடைஞ்சலாய் இல்லமால் போய்விடலாம் எனமுடிவு எடுக்கையில் தன் மனம் நிறைய மாட்டிக்கொள்கிறான் அவன். அவன் பற்றிய விவரங்கள் அவளுக்கு அத்துப்படி ஏனென்றால் ஒரு முறை பேருந்து பயணத்தின் போது இவள் மாட்டிக்கொள்ள இருந்த விபத்தில் இவன் சிக்கி, அப்படியே இருவரும் நன்கு பரிட்சியமாகி இருந்தனர். 
                         ஆனால் அவன் இவளது சாதிக்காரன் அல்ல.... யோசிக்கிறாள். பின் தெளிவான முடிவு எடுக்கிறாள். "தன் விருப்பத்தை பெரிது படுத்தாது, சாதி, பணம் வெறியில் மாய்ந்து போயிருக்கும் பெற்றோர்களோடு அல்லோல படுவதற்கு, உயிர் காப்பாற்றிய சமயத்தில் கால் இழந்து விட்டிருந்த அந்த கண்ணனோடு வாழ்வது கோடி இன்பம்" என்று.