Showing posts with label தமிழ் மொழி. Show all posts
Showing posts with label தமிழ் மொழி. Show all posts

Friday, 14 September 2012

அழகு தமிழ்......

அருமையான, நிகரற்ற  சொல் பொருள் வளம், இலக்கண இலக்கிய நயம் வேறு எந்த மொழியிலும் காண முடியாத ஒரு தனித் தன்மை பெற்று சிறந்து விளங்குவது நம் தமிழ் மொழியே... இருந்த போதிலும் வளர்ந்து கொண்டிருக்கிற இந்த நாகரீக கால கட்டத்தில் நம் தாய் மொழியான தமிழை பேசுவதில் நம்மில் பலரும் முனைப்புடன் இருப்பது இல்லை... ஆங்கிலம் பேசுவதுதான் அழகு என்று எண்ணுபவர்களே... நம்முடைய மொழி தெரியாத அந்நியர்களுக்கு கருத்து பரிமாற்றம் செய்ய அதை பயன்படுத்தலாம். அதோடு சரி... தெரிந்து கொள்ளுங்கள் ஒன்றை... அழகிற்காக பேசும் ஆங்கிலம்  ஒரு அறிவுதான்... அது மொழி கிடையாது... மற்ற நாடுகளில் அவரவர் தாய் மொழியைத் தான் முதலில் தன் குழந்தைக்கு பயிற்றுவிக்கின்றனர் பெற்றோர்கள்.. ஆனால் நம்முடைய தமிழ் நாட்டில் பிறந்த குழந்தை பேச ஆரம்பிப்பதற்கு முன் "அம்மா" என்று அழைக்க சொல்லிக் கொடுக்காமல் "மம்மி சொல்லுடா செல்லம்" என்று அங்கலாய்க்கும் தாய்மார்கள் இல்லாமல் இல்லை.. தமிழர்களிடையே தற்சமயம் அனைத்து தமிழ் சொற்களும் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருக்கிறதே... இப்படியே போனால் இன்னும் அறுபது ஆண்டுகளில் தமிழ் மொழி தடம் தெரியாமல் அழிந்து விடுமோ என்ற பயம் அவசரமாய் வந்து சூழ்ந்து விடுகின்றது.  சில தமிழ் சொற்களை சிரிப்பு தரும் நிகிழ்ச்சிக்கு பயன்படுத்துவதைக் கண்டு வருத்தப் படுவதா..? சிரிப்பதா...? இந்த மாதிரி நிகழ்சிகளை விட நாம் நம் தமிழ் மொழியை தெளிவாகப் பேசினாலே வித்தியாசாமாய் நம்மைப் பார்க்கும் இந்த மக்களை நினைத்து, அவர்களின் போக்கை எண்ணி சிரிப்பதா..? வருத்தப் படுவதா...? கோவப் படுவதா...? இதிலும் ஆங்கிலத்தில் பல சொற்களுக்கு நிகரான சரியான தமிழ் சொல் தெரியமாலே இருக்கும் மக்களை நினைத்து என்ன செய்வது... வளரும் இளம் சமுதாயம், வளர்ந்து கொண்டிருப்பர்வர்கள் நம் தமிழ் மொழியின் வளர்ச்சியினை கையில் எடுத்தாலேயொழிய நம் தமிழ் மொழி அழியாமல் உயிர் பெற்று புகழ் நாட்டி நிற்கும் ...