Tuesday 11 September 2012

நேற்று இரவில்...

உச்சி முகர்ந்து கொண்டிருந்தேன்
புதுவரவாய் வந்த
அந்த பிஞ்சுவின்
பஞ்சு கைகளை...

சூழலின் உஷ்ணத்தில்
கண் திறக்காமல்,
உதடு பிதுங்கி,
விரல் அசைத்து,
கால் உதைத்து,
மெல்ல தன் கழுத்தை
மெதுவாய் சுனக்கிய
அந்த ஆரமுதுவின்
அழகில் ஸ்தம்பித்துப் போய்
அமர்ந்துவிட்டேன்
அந்த அழகின் வசத்தில்...

ஒரு கணத்தில்
ஒட்டு மொத்த
மகிழ்ச்சியும்
துள்ளிக் குதித்து
ஓடி வந்து
கட்டி அணைத்துக் கொண்டது என்னை
அந்த பிஞ்சு முகம் பார்த்ததில்....

அவனின் முனகல்களைக் கேட்டதும்
ஒட்டு மொத்த
பிரச்சினைகளும்
தவிடு பொடியாகிப் போனதைப் போல
ஓர் உந்துதல்....

இதைத் தவிர
பெரிய சந்தோசம்
ஓன்று இந்த உலகில்
இருந்ததை
எனக்குத் தெரிய வில்லை...

அந்த பிஞ்சு குழந்தை
தூங்கிய அழகை
ரசித்தவாறே
நானும் தூங்கச் சென்றேன்
நேற்று இரவில்...

No comments:

Post a Comment